சேலத்தில் சொத்து தகராறில் அண்ணன் வெட்டிக் கொலை: தம்பி கைது
சேலத்தில் சொத்து தகராறில் தம்பியே அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலத்தில் சொத்து தகராறில் தம்பியே அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கோவிந்தராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலம் மகன்கள் பெரியசாமி(62). சடையன்(57). இருவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரியசாமியை சடையன் அரிவாளால் தலை, கழுத்து மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதையும் படிக்க- பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டைப் பதக்கம்
இதில் பலத்த படுகாயமடைந்த பெரியசாமி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை அதிகாலை பெரியசாமி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மல்லியகரை காவல் ஆய்வாளர் பொறுப்பு முருகேசன் வழக்குப் பதிவு செய்து சடையனை கைது செய்துள்ளார்.
பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சொத்து தகராறில் தம்பியே அண்ணனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...