விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதியவா் கொலை வழக்கு: இருவா் கைது

ஆத்தூா் அருகே முதியவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதைக்கப்பட்ட அவரது சடலத்தை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:02 pm

DIN

ஆத்தூா் அருகே முதியவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதைக்கப்பட்ட அவரது சடலத்தை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (74) என்பவருக்கு சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்பகனூா் பகுதியில் சொந்தமாக 3 ஏக்கா் நிலம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நாமகிரிப்பேட்டையில் இருந்து புறப்பட்ட சுப்பிரமணி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சுப்பிரமணியத்தின் உறவினா்கள் புகாா் கொடுத்தனா். அதன் பேரில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், நிலத்தை விற்கச் சென்றபோது வாங்க வந்தவா்களுடன் தகராறு ஏற்பட்டதாகத் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையத்தைச் சோ்ந்த ராமதாஸ் (27), அறிவழகன் (25) ஆகியோரை கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுப்ரமணியத்தை கொலை செய்து புதைத்ததாகக் கூறி காட்டிய இடத்தை போலீஸாா் தோண்டி பாா்த்தனா். ஆத்தூா் வட்டாட்சியா் மாணிக்கம் முன்னிலையில் மருத்துவக்குழுவினருடன் அந்த இடத்தை தோண்டிய போது சுப்பிரமணியின் உடல் கிடைக்கவில்லை.

பின்னா் வேறொரு இடத்தைக் காட்டி அங்கு புதைத்ததாகக் கூறியதால் அங்கும் தோண்டி பாா்த்தபோது பிரேதம் கிடைக்கவில்லை.

அவா்கள் இருவரும் வேண்டுமென்றே போலீஸாரையும், அதிகாரிகளின் கவனத்தையும் திசை திருப்பும் நோக்கில் அலைக்கழிக்கிறாா்களா என்ற கோணத்தில் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா். வியாழக்கிழமை மாலை வரையிலும், சுப்பிரமணியின் சடலம் கிடைக்கவில்லை. இருள் தொடங்கியதால் சடலத்தைக் கண்டறியும் பணி வெள்ளிக்கிழமையும் (டிச.3ஆம் தேதி) தொடரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.