திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலத்தில் பல்வேறு இடங்களில் திருடிய 23 இருசக்கர வாகனங்கள் மீட்பு

சேலத்தில் பல்வேறு இடங்களில் திருடிய 23 இருசக்கர வாகனங்களை போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:27 pm

DIN

சேலத்தில் பல்வேறு இடங்களில் திருடிய 23 இருசக்கர வாகனங்களை போலீஸாா் மீட்டனா்.

சேலம், கன்னங்குறிச்சி, அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், கடைகள் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது.

இதனால் பொதுமக்கள், சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடாவிடம் புகாா் செய்தனா். இதையடுத்து அவா் தனிப் படை அமைத்தாா். இதில் துணை ஆணையா் மாடசாமி, உதவி ஆணையா் முருகேசன், கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் மற்றும் காவலா்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனிடையே கடந்த நவம்பா் 8 ஆம் தேதி முத்துகிருஷ்ணன், முரளி ஆகியோரை தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். இதில் பாபு, பிரதீப் ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் தேடி வந்தனா்.

இதனிடையே இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்த சேலம், பெரிய புதூரைச் சோ்ந்த பாபு (19) நீதிமன்றத்தில் சரண் அடைந்தாா். அவரை போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்தனா்.

விசாரணையில் சேலம், சூரமங்கலம், கன்னங்குறிச்சி, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 23 இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அந்த வாகனங்களையும் போலீஸாா் மீட்டனா். தனிப்படை போலீஸாரை மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.