இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!

ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்வு

News image
பிளாஸ்டிக் பாட்டில்- பிரதிப் படம்
Updated On :19 மார்ச் 2026, 3:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் விலையும் உயர்ந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும்நிலையில், பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், குடிநீர் பாட்டில்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வரையில் ரூ. 8-க்கு விற்கப்​பட்​ட 200 மி.லி. குடிநீர் பாட்​டில் இன்று ரூ. 10-க்​கும், ரூ.10-க்கு விற்​கப்பட்ட 300 மி.லி. குடிநீர் பாட்​டில் ரூ. 12-க்​கும், ரூ.12-க்கு விற்கப்பட்ட 500 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.16-க்​கும், ரூ. 20-க்கு விற்கப்​பட்​ட ஒரு லிட்​டர் பாட்​டில் ரூ. 25-க்​கும், ரூ. 30-க்கு விற்கப்பட்ட 2 லிட்​டர் பாட்​டில் ரூ. 35-க்​கும், ரூ. 50-க்கு விற்​கப்பட்ட 5 லிட்​டர் பாட்​டில் ரூ. 70 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.

மேலும், மீண்டும் பயன்​படுத்​தக்கூடிய கேன்​களில் அடைக்​கப்பட்ட 20 லிட்​டர் குடிநீர் ரூ. 45-ல் இருந்து ரூ. 55-க்​கு உயர்த்தப்பட்டுள்ளது.

பொது​வாக, கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்​கப்​படும் பெட்ரோ ரசாயன பொருள்​கள் மூலமாகவே பிளாஸ்​டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஈரான் போர் காரணமாக, பாலி எத்​திலீன், பிவிசி, பாலி புரோப்பிலீன், பாலிஸ்​டிரீன் போன்​றவற்​றின் விலை சுமார் 40 சதவிகிதம் உயர்ந்​ததையடுத்​து, பிளாஸ்​டிக் பொருளி​கள் விலையும் அதி​கரித்​துள்​ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.