ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!
ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்வு


ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் விலையும் உயர்ந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும்நிலையில், பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், குடிநீர் பாட்டில்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வரையில் ரூ. 8-க்கு விற்கப்பட்ட 200 மி.லி. குடிநீர் பாட்டில் இன்று ரூ. 10-க்கும், ரூ.10-க்கு விற்கப்பட்ட 300 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ. 12-க்கும், ரூ.12-க்கு விற்கப்பட்ட 500 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.16-க்கும், ரூ. 20-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பாட்டில் ரூ. 25-க்கும், ரூ. 30-க்கு விற்கப்பட்ட 2 லிட்டர் பாட்டில் ரூ. 35-க்கும், ரூ. 50-க்கு விற்கப்பட்ட 5 லிட்டர் பாட்டில் ரூ. 70 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.
மேலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய கேன்களில் அடைக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் ரூ. 45-ல் இருந்து ரூ. 55-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுவாக, கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோ ரசாயன பொருள்கள் மூலமாகவே பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஈரான் போர் காரணமாக, பாலி எத்திலீன், பிவிசி, பாலி புரோப்பிலீன், பாலிஸ்டிரீன் போன்றவற்றின் விலை சுமார் 40 சதவிகிதம் உயர்ந்ததையடுத்து, பிளாஸ்டிக் பொருளிகள் விலையும் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...