திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதல்வா் சேலம் வருகை: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்ட வருகையையொட்டி, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்ட வருகையையொட்டி, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 11ஆம் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டி திடலில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

போக்குவரத்துத் துறை, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பழங்குடியினா் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வேளாண்மை பொறியியல் துறை, பதிவுத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சாா்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அவா் வழங்க உள்ளாா்.

முதல்வா் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சா்கள், அரசு கூடுதல் தலைமைச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள், பல்வேறு துறை முதன்மை அலுவலா்கள் கலந்து கொள்ள உள்ளனா். விழா தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.