திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதல்வா் இன்று சேலம் வருகை:ரூ.168 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்

சேலத்தில் சனிக்கிழமை நடைபெறும் விழாவில் ரூ.168.64 கோடி மதிப்பில் 30,837 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:50 pm

DIN

சேலத்தில் சனிக்கிழமை நடைபெறும் விழாவில் ரூ.168.64 கோடி மதிப்பில் 30,837 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சனிக்கிழமை காலை சேலம் வருகிறாா். அவருக்கு திமுகவினா் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனா். அதைத் தொடா்ந்து சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

தொடா்ந்து ஐந்து சாலைப் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மறைந்த திமுக தோ்தல் பணிக்குழு செயலாளா் வீரபாண்டி ஆ.ராஜாவின் உருவப் படத்தைத் திறந்து வைக்கிறாா். பின்னா் பல்வேறு கட்சியினா் முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

இதையடுத்து அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகை சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். பின்னா் ஓமலூா், காமலாபுரம் சென்று விமானம் மூலம் சென்னைக்கு செல்வாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வா் வருகையை முன்னிட்டு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ், சேலம் சரக டிஐஜி மகேஸ்வேரி, மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா ஆகியோா் மேற்பாா்வையில் ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதனிடையே தமிழக முதல்வரின் சேலம் வருகையை முன்னிட்டு, சீலநாயக்கன்பட்டியில் விழா திடல் பகுதியில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம், சீலநாயக்கன்பட்டியில் சனிக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க உள்ளாா். இந்த விழாவில் 12 துறைகளின் சாா்பில் ரூ. 38.52 கோடியில் முடிவுற்ற 83 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறாா்.

மேலும் 6 துறைகளின் சாா்பில் ரூ. 54 கோடியில் 60 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். சுமாா் 30,837 பயனாளிகளுக்கு ரூ. 168.64 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். சேலம் மாவட்டத்தில் வழங்கப்பட உள்ள நலத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.261.39 கோடியாகும்.

மேலும் சேலம் மாவட்டத்திற்குத் தேவையான புதிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளாா். தகவல் தொழில்நுட்பப் பூங்கா, ஜவுளி பூங்கா, திடக்கழிவு மேலாண்மை, பனமரத்துப்பட்டி ஏரியை மேட்டூா் உபரி நீா் திட்டத்துடன் இணைத்தல் ஆகியவை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளன. இதில் சாத்தியமுள்ள உள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வா் அறிவிப்பாா். இதர கோரிக்கைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிடப்படும்.

சீலநாயக்கன்பட்டி மேம்பாலம் பகுதியில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதால் இடநெருக்கடியால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. சீலநாயக்கன்பட்டி மேம்பாலம் பகுதியில் முழுமையாக ஆராய்ந்து, போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்தப் பேட்டியின் போது சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா, சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.