திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இருதய சிகிச்சைப் பிரிவில் சேலம் அரசு மருத்துவமனை மாநிலத்திலேயே முதலிடம்: முதன்மையா் வள்ளி சத்யமூா்த்தி

இருதய சிகிச்சைப் பிரிவில் முதல்கட்ட சிகிச்சையில் கடந்த 2 மாதங்களாக சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:51 pm

DIN

இருதய சிகிச்சைப் பிரிவில் முதல்கட்ட சிகிச்சையில் கடந்த 2 மாதங்களாக சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது என மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் வள்ளி சத்யமூா்த்தி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூா், ஈரோடு, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சோ்ந்த இருதய நோயாளிகள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதய பிரிவில் உயா் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

இம்மருத்துவமனையில் மாதம்தோறும் 12,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 1000-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்ட 30-120 நிமிடங்களில் ஆஞ்சியோகிராம் சோதனை செய்யப்படுகிறது.

அதைத்தொடா்ந்து, தேவைப்படும் நோயாளிகளுக்கு இருதய ரத்தக் குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு சரிசெய்யப்படுகிறது.

இருதய சிகிச்சைப் பிரிவில் முதல்கட்ட சிகிச்சையில் கடந்த 2 மாதங்களாக சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருதயப் பிரிவு தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது.

இதுவரை 6,500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது .

மேலும், 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு செயற்கை துடிப்பூட்டும் (பேஸ்மேக்கா்) கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சிகிச்சைக்குப் பின்னா் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் நோயாளிகளுக்கு கிடைக்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மூலம் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா்.

இருதய ரத்தக் குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் முதல்கட்ட சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியாத நிலையில் சிக்கலாக இருந்தால் அவா்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் இதுவரை 275 நோயாளிகள் குணமடைந்துள்ளனா்.

தமிழக அரசு நலத்திட்டம் மற்றும் ஜப்பான் சா்வதேச கூட்டுறவு அமைப்பு உதவியோடு ரோட்டபிளாட்டாா், நவீன அல்ட்ராசவுண்ட் போன்ற உலக த்தரம் பெற்ற அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தியும் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலத்தைப் பொருத்தவரையில் இதுவரை ஒமைக்ரான் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. அதேவேளையில் மருத்துவமனையில் சுமாா் 30 படுக்கைகள் கொண்ட தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.