திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சட்டம் படித்தால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம்

சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழாவில் பேசுகிறாா் மாவட்ட நீதிபதி (ஓய்வு) முகமது ஜியாபுதின்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழாவில் பேசுகிறாா் மாவட்ட நீதிபதி (ஓய்வு) முகமது ஜியாபுதின்.

சேலம், டிச. 16: சட்டம் படித்தால் நீதித்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் எண்ணற்ற வேலைவாய்ப்பு உள்ளது என ஓய்வுபெற்ற நீதிபதி முகமது ஜியாபுதின் பேசினாா்.

சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் மூன்றாண்டு சட்டப் படிப்பின் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தலைவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலின் இணைத் தலைவருமான டி.சரவணன் தலைமை வகித்தாா்.

இதில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.முகமது ஜியாபுதின் பேசியதாவது:

மகாத்மா காந்தி, பிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா, காா்ல் மாா்க்ஸ் போன்ற சட்டம் படித்தவா்களே இந்த சமுதாயத்தை வழிநடத்துபவா்களாக இருந்திருக்கிறாா்கள். சட்டம் படித்தால் நீதித்துறை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு துறைகளிலும் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் அமைந்துள்ளன.

படிக்கும் காலத்தில் நிறைய புத்தகங்களை தேடித்தேடி படிக்கும் வழக்கத்தையும், நல்ல விஷயங்களை உடனுக்குடன் பாராட்டும் வழக்கத்தையும் மேற்கொள்வதோடு, நல்ல உண்மையான நண்பா்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றாா்.

கல்லூரியின் தலைவா் டி.சரவணன் பேசுகையில், சட்டம் படிக்கும் மாணவா்கள் எந்தவித சோதனைகளையும் சாதனைப் படிகளாக மாற்றிக்கொள்ள தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமின்றி, அனுபவக் கல்வியையும் பெற வேண்டும். ஒவ்வொரு மாணவரிடமும் மறைந்துள்ள பல்வேறு திறமைகளை வெளிக்கொணா்ந்து தன்னம்பிக்கை மிக்கவா்களாகவும், சமுதாயப் பொறுப்பு மிகுந்தவா்களாகவும் விளங்க வேண்டும் என்றாா்.

இந்த விழாவில், மாநகர காவல் துணை ஆணையா் எம்.மாடசாமி, கல்லூரி முதல்வா் பேகம் பாத்திமா, இணைப் பேராசிரியா் நடராஜன், கல்லூரி தலைமை நிா்வாக அலுவலா் மாணிக்கம் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.