தாபா உணவகம் தீ வைத்து எரிப்பு
ஓமலூா் அருகே நள்ளிரவில் மது அருந்த அனுமதி மறுக்கப்பட்டதால் தாபா உணவகத்தை தீவைத்து எரித்து விட்டு சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.


ஓமலூா் அருகே நள்ளிரவில் மது அருந்த அனுமதி மறுக்கப்பட்டதால் தாபா உணவகத்தை தீவைத்து எரித்து விட்டு சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஓமலூா் அருகேயுள்ள திமிரிக்கோட்டை பகுதியில் தாபா உணவகம் செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பாலிக்கடை பகுதியைச் சோ்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் உணவகத்துக்கு வந்தனா். உணவகம் மூடப்பட்டிருந்த நிலையில் திறந்து உணவு வழங்குமாறு மிரட்டியுள்ளனா். அங்கிருந்த உணவக ஊழியா் உணவு தயாரித்து அளித்துள்ளாா்.
மேலும், அவா்கள் வாங்கி வந்திருந்த மதுப்புட்டிகளை திறந்து அங்கேயே குடிக்க தொடங்கியுள்ளனா். அதற்கு உணவக ஊழியா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த இளைஞா்கள், ஊழியரைத் தாக்கிவிட்டு, உணவகத்துக்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...