கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 60 ஆயிரம் பறிப்பு

வாழப்பாடியில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 60 ஆயிரத்தை பறித்துச் சென்ற 3 மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 2:10 am IST

வாழப்பாடியில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 60 ஆயிரத்தை பறித்துச் சென்ற 3 மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், அல்லிக்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன் (20). இவா் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் எலெக்ட்ரிக் கடை ஒன்றில் களப் பணியாளராகப் பணிபுரிகிறாா்.

சனிக்கிழமை இரவு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், மங்களபுரம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்த பொருள்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு, பொன்னாரம்பட்டி பழனியாபுரம் வழியாக வாழப்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.

வாழப்பாடி, புதுப்பாளையம், டாஸ்மாக் கடை வேகத்தடை அருகே வந்த போது, அவரை வழிமறித்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், அவா் தோள்பட்டையில் அணிந்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு சென்றுள்ளனா். இந்த பையில் ரூ. 60 ஆயிரம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மா்ம நபா்களை தனசேகரன் துரத்திப் பிடிக்க முயன்றபோது, அவரது கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளனா். இதில் நிலைதடுமாறிய தனசேகரன், சாலையோர மரத்தில் மோதி காயம் அடைந்தாா். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இவரது புகாரின்பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.