தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டுக் காளை உயிரிழப்பு

தருமபுரியில் கடந்த 13ஆம் தேதி ஜல்லிக்கட்டில் பங்கேற்றபோது, எதிரே வந்த காளை மீது மோதி காயமடைந்த, தம்மம்பட்டி காளை சனிக்கிழமை சிகிக்சை பலனின்றி உயிரிழந்தது.

News image

உயிரிழந்த ஜல்லிக்கட்டுக் காளை.

Updated On :20 பிப்ரவரி 2021, 4:04 pm

தருமபுரியில் கடந்த 13ஆம் தேதி ஜல்லிக்கட்டில் பங்கேற்றபோது, எதிரே வந்த காளை மீது மோதி காயமடைந்த, தம்மம்பட்டி காளை சனிக்கிழமை சிகிக்சை பலனின்றி உயிரிழந்தது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருபவர் மனோஜ். இவரது காளை பல வெளிமாவட்டங்களில் பங்கேற்று பிடிபடாமல் இருந்துவந்தது. இவரது காளை தம்மம்பட்டியில் பிப்.6ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றபோது, இவரது மாட்டை பிடிப்பவருக்கு மூன்று இலட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், இவரது காளையை யாரும் பிடிக்க முடியவில்லை. 

அதன்பின்னர், தருமபுரியில் 13ஆம் தேதி நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மனோஜின் காளை வீரா பங்கேற்றது. அப்போது சீறிப்பாய்ந்த அந்தக்காளை, திரும்பவும் அதே வழியில் திரும்பி வாடிவாசல் நோக்கி பாய்ந்தோடி வந்தது. அப்போது எதிரே வந்த காளை, மனோஜின் வீரா என்ற பெயர் கொண்ட காளை மீது நேருக்குநேர் மோதியது. இதில் மனோஜின் காளை அதே இடத்தில் மயங்கி விழுந்தது. 

Story image

அதனையடுத்து கடந்த ஒரு வாரமாக அந்தக்காளைக்கு தம்மம்பட்டியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, சனிக்கிழமை உயிரிழந்தது. அதனையடுத்து செல்லமாகவும், அதிக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட காளை வீராவிற்கு, ஜல்லிக்கட்டு ரசிகர்கள் பலர் திரளாக வந்திருந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவர்களது மத முறைப்படி தம்மம்பட்டி கோனேரிப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.