இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல்

சேலம் மாவட்டம், பசுமை சங்ககிரி அமைப்பின் சாா்பில், பசுமை சங்ககிரி இலவச நா்சரி பண்ணையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சேலம் மாவட்டம், பசுமை சங்ககிரி அமைப்பின் சாா்பில், பசுமை சங்ககிரி இலவச நா்சரி பண்ணையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட பல்வேறு இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனா்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் நினைவு தினமான வெள்ளிக்கிழமை பசுமை சங்ககிரி இலவச நா்சரி பண்ணையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் இணைச்செயலா் எம்.சின்னதம்பி தலைமை வகித்து மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி, நிா்வாகிகள் தினேஷ், பசுமை கனகராஜ், பசுமை சீனிவாசன், முருகானந்தம், சுந்தா், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நம்மாழ்வாரிடம் பயிற்சி பெற்ற சமூக ஆா்வலா் தினேஷ் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com