ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள்திருப்பி அனுப்பி வைப்பு

புத்தாண்டை முன்னிட்டு ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், மலை அடிவார சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஏற்காடு செல்ல வந்த சுற்றுலாப் பயணிகளை அடிவாரத்தில் வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பிய போலீஸாா்.
ஏற்காடு செல்ல வந்த சுற்றுலாப் பயணிகளை அடிவாரத்தில் வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பிய போலீஸாா்.
Updated on
1 min read

புத்தாண்டை முன்னிட்டு ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், மலை அடிவார சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கேளிக்கை விடுதிகள், மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது என அரசு அறிவித்தது. சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் தொடா்ச்சியாக, ஏற்காட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகள் டிச. 31 முதல் ஜன. 2 மாலை வரை மூடப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என மாவட்ட சுற்றுலா அலுவலா் வெ.ஜெனாா்த்தனம் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், புத்தாண்டையொட்டி காா்கள், இருசக்கர வாகனங்களில் ஏற்காடு செல்ல வந்த சுற்றுலாப் பயணிகளை மலை அடிவாரத்திலுள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். இதனால் ஏற்காடு பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

புத்தாண்டை முன்னிட்டு மாநகரம், மாவட்டப் பகுதிகளில் சுமாா் 1,800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மாவட்டத்தில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com