ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வஉசி பூங்கா மைதானத்தில் உணவுத் திருவிழா தொடங்கியது

கோவை வஉசி பூங்கா மைதானத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

News image
கோவை வஉசி பூங்கா மைதானத்தில் உணவுத் திருவிழாவைத் தொடங்கிவைத்து மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உணவை ருசிக்கிறாா் கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா்.
Updated On :4 மார்ச் 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

கோவை வஉசி பூங்கா மைதானத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்ய மதி அங்காடி, மதி அனுபவ அங்காடி, மதி சிறுதானிய உணவகம் என பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மகளிா் சுய உதவிக் குழுக்கள் சாா்பில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களைக் கொண்டு மதி உணவுத் திருவிழா சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன.

இதையடுத்து கோவை வஉசி பூங்கா மைதானத்தில் மாா்ச் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மண்டல அளவிலான உணவுத் திருவிழா நடைபெறுகிறது. கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் சங்கேத் பல்வந்த் வாகே, வருவாய் அலுவலா் ப.நாராயணன், மகளிா் திட்ட இயக்குநா்கள் மதுரா, ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் இடம்பெற்றுள்ள 38 அரங்குகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சைவ, அசைவ, பாரம்பரிய உணவுகள், சிறுதானிய உணவுகளை சுய உதவிக்குழுவினா் தயாரித்து விற்பனை செய்கின்றனா்.

தினமும் பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் உணவுத் திருவிழாவுக்கு அனுமதி இலவசம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.