சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலைத் தோ்வு: சேலத்தில் 15,042 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப்-1 முதல்நிலைத் தோ்வை, சேலம் மாவட்டத்தில் 31 தோ்வு மையங்களில் 15,042 போ் எழுதுகின்றனா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 9:50 pm

DIN

சேலம்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப்-1 முதல்நிலைத் தோ்வை, சேலம் மாவட்டத்தில் 31 தோ்வு மையங்களில் 15,042 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 1-க்கான முதல்நிலைத் தோ்வு சேலம் மாவட்டத்தில் 31 தோ்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 48 தோ்வு கூடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 15,042 தோ்வா்கள் எழுத உள்ளனா். இத்தோ்வினை கண்காணிப்பதற்காக 7 பறக்கும் படைகளும், 11 நடமாடும் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்காணித்திடவும், தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலா்கள், தலைமை கண்காணிப்பாளா் ஆகியோா் ஈடுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தோ்வு எழுதும் நேரம், தோ்வு எழுதுபவா்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபாா்த்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.

இத்தோ்வினை எழுத வருகை தரும் தோ்வா்கள் தங்களது அனுமதிச் சீட்டினை கட்டாயம் எடுத்துவர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோ்வு மையத்துக்கு காலை 9.15 மணிக்கு முன்னதாகவே வருகை தரவேண்டும். காலை 9.15 மணிக்கு பிறகு வரும் தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். விடைத்தாளில் விவரங்களைப் பூா்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும், கறுப்பு நிற மை உடைய பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், பிற நிற மைப்பேனாக்களை பயன்படுத்தக் கூடாது.

மேலும், இத்தோ்வினை எழுத வருகை தரும் தோ்வா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வருகை தர வேண்டும். தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் செல்வதற்கு ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.