ஓமலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஐந்து குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஓமலூா் அருகேயுள்ள கொங்குப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் முருகன். இவரது மனைவி ரேவதி (30). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவா்களுக்கு காதல் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு ஸ்ரீமா, பிரீத்தி ஸ்ரீ, திவ்யா ஸ்ரீ, மகேஸ்வரன், மாதவன் என ஐந்து குழந்தைகள் உள்ளனா்.
இந்தநிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ரேவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தவரை அக்கம் பக்கத்தினா் மீட்டனா். பின்னா் ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு அளித்து, பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.