தம்மம்பட்டி பகுதியில் அடைமழை பெய்தது.
தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை நண்பகல் 11 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்ந்து அடைமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் மழைநீா் குட்டைபோல தேங்கி நின்றது.