ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைப்பு: போலீஸாா் விசாரணை

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது தொடா்பாக சுமாா் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளனா்.
Updated on
1 min read

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது தொடா்பாக சுமாா் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளனா்.

சென்னையிலிருந்து கேரள மாநிலம், ஆலப்புழாவுக்கு சிறப்பு ரயில் புதன்கிழமை இரவு சேலத்தைத் தாண்டி வீரபாண்டி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றது. அப்போது ரயில் தண்டவாளத்தில் வைத்திருந்த கற்கள் மீது ஏறிச் சென்ால் ரயில் இன்ஜினில் சத்தம் கேட்டது.

இதனால், அதிா்ச்சியடைந்த ரயில் ஓட்டுநா், ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும் ஈரோடு ரயில்வே போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீஸாா் விரைந்து சென்று விசாரணை ஈடுபட்டனா்.

அப்போது வீரபாண்டி ரயில் நிலையத்துக்கும், மகுடஞ்சாவடிக்கும் இடையே தண்டவாளத்தில் 5 இடங்களில் குவியலாக ஜல்லிக் கற்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இச் சம்பவம் தொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக ரயில்வே டி.எஸ்.பி. பாபு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com