ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எடப்பாடி பகுதியில் 6 அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளி அன்று நடைபெற்ற நிகழ்வில், 6 அம்மா சிறு மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. 

News image
கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளி அன்று திறந்துவைக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனை.
Updated On :8 ஜனவரி 2021, 12:17 pm

DIN

எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளி அன்று நடைபெற்ற நிகழ்வில், 6 அம்மா சிறு மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. 

கொங்கணாபுரம் ஒன்றியம் கோணசமுத்திரம் ஊராட்சிப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் பொன்னையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, தமிழக முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைதார்.

தொடர்ந்து எடப்பாடி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோயில்பாளைம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்டப்பொருப்பாளருமான வெங்கடாசலம் கலந்துகொண்டு அம்மா சிறு மருத்துவமனை வளகத்தினை திறந்துவைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தினை வழங்கினர். 

Story image

எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி, ஆடையூர், வேம்பனேரி, ஆவணிப்பேரூர் கீழ்முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளி அன்று நடைபெற்ற நிகழ்வில் தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்ச்சியல் மாவட்ட விவசாயிகள் பிரிவு மாவட்ட செயலாளர் செல்லதுரை, ஒன்றியக்குழுத்தலைவர்கள் கரட்டூர்மணி, குப்பம்மாள்மாதேஸ், ஆவின் தலைவர் ஜெயராமன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்வகுமார், பக்கநாடுமாதேஸ், ஊராட்சிமன்றத் தலைவர்கள் தங்காயூர்பாலாஜி, எஸ்.ஏ.ராஜ்குமார், சித்தூர்நாகராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.