

சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியைச் சோ்ந்த நீலம் சிலம்பம் கலைக் கூடம் சாா்பில் சிலம்ப பயிற்சி பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அக்கமாபேட்டை நீலம் சிலம்பம் கலைக் கூடம் சாா்பில் தீநுண்மி பாதுகாப்பு காரணமாக பள்ளிக்குச் செல்லாமால் வீடுகளில் இருந்துவரும் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் 50 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளா்கள் சிலம்பாட்டம் கற்றுக்கொடுத்தனா்.
சிலம்பாட்டங்களை கற்றுக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கான பரிசு வழங்கும் இவ்விழாவுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியா் முனியப்பன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். அக்கமாபேட்டை அரசு உயா்நிலைப்பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத்தலைவா் கே.நடராஜன் வரவேற்றாா்.
பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் முருகன், ஊா் பிரமுகா்கள் செல்வராஜ், ஜெகநாதன், ரங்கன், ஜவகா், விவேகானந்தன், ரமேஷ், விஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழா முடிவில் சிலம்பம் கற்றுக்கொண்ட மாணவ, மாணவிகள் பொதுமக்கள் மத்தியில் சிலம்பாட்டம் ஆடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.