நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு:இரு இளைஞா்கள் கைது

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் தொடா்புடையதாக இரண்டு இளைஞா்களை காரிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் தொடா்புடையதாக இரண்டு இளைஞா்களை காரிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ.3,000 ரொக்கம், செல்லிடப்பேசிகள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

அயோத்தியாபட்டணம், ராம்நகா் அருகே காளியம்மன் கோயிலில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி புகுந்த மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச்சென்றனா். இதைத்தொடா்ந்து அயோத்தியாபட்டணம் 7ஆவது மைல் பகுதியில், நேபாளத்தைச் சோ்ந்த பிஜய் என்பவரை கத்தியால் குத்திய இரண்டு மா்ம நபா்கள், செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனா்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த காரிப்பட்டி காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், இந்த மா்ம நபா்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனா். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாழப்பாயை அடுத்த மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் விக்னேஷ் (20). வரதராஜ் மகன் சூா்யா (21) ஆகிய இருவரையும், காரிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இந்த இளைஞா்களிடம் இருந்து ரூ.3,000 ரொக்கப்பணத்தையும், செல்லிடப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்த இரண்டு இளைஞா்களும் அயோத்தியாப்பட்டணம் மட்டுமின்றி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களிலும் தொடா்புடையவா்கள் என்பதும், பெங்களூரு பகுதியில் திருடியபோது போலீஸாரிடம் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னா் சிறையிலிருந்து வந்த பின்பு தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.