விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

ஆத்தூா் கல்லுடைச்சான் குன்று அருகே உள்ள குட்டையில் மூழ்கி பாலா (13) என்ற சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:09 pm

DIN

ஆத்தூா் கல்லுடைச்சான் குன்று அருகே உள்ள குட்டையில் மூழ்கி பாலா (13) என்ற சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஜெகதீஷ் என்பவரின் மகன் பாலா(13). இவரது தாய், தந்தை இருவரும் இறந்து விட்டனா். சிறுவன் பாலா அவருடைய தாத்தா சேகா் என்பவரது வீட்டில் வசித்து வந்தாா். தாத்தா கல்லுடைச்சான் குன்று அருகே வசித்து வருகிறாா்.

கல்லுடைச்சான் குன்று அருகே கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குட்டை ஒன்று உருவாகியுள்ளது. அக்குட்டையில் தண்ணீா் அதிகமாக இருந்ததால் சிறுவா்கள் அதில் குளித்து விளையாடி வந்தனா்.

இந்நிலையில் சிறுவன் பாலா குட்டையில் குளிக்க வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து சிறுவன் பாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.