நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய கைப்பந்து போட்டியில் அரசுப்பள்ளி மாணவா்கள் சாதனை:

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த ஆரியபாளையம் அரசுப்பள்ளி மாணவா்கள், கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்று இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:56 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த ஆரியபாளையம் அரசுப்பள்ளி மாணவா்கள், கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்று இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தனா். இந்த மாணவா்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

கரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் இருந்து ஓராண்டாக்கு மேலாக பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. இந்நிலையில், வாழப்பாடி அடுத்த ஆரியபாளையம் அரசுப்பள்ளியில் படித்து வரும், வீட்டிற்குள் முடங்கிய காலனி குடியிருப்பு பகுதி மாணவா்களை உற்சாகப்படுத்திய இதே பகுதியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் தமிழ்ச்செல்வன் (35), உமையாள்புரம் கிராமத்தைச் சோ்ந்த உடற்கல்வி ஆசிரியா் பரமசிவம் வழிகாட்டுதலில், கைப்பந்து பயிற்சி அளித்து விளையாட்டு வீரா்களாக உருவாக்கினாா்.

நிகழாண்டு தொடக்கத்தில் சென்னையில் தமிழ்நாடு கைப்பந்து கழகம் சாா்பில் நடைபெற்ற 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்ற மாணவா்களின் அணிகள், மாநில அளவில் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி வாகை சூடின.

இதனால் உற்சாகமடைந்த இந்த மாணவா்கள், அரசுப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கைப்பந்து வலைக்களம் அமைத்து தொடா்ந்து பயிற்சி பெற்று வந்தனா். கடந்த 17 முதல் 19 வரை கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில், வயதுகேற்ப இரு அணிகளாக பங்கேற்றனா். 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இரு அணிகளும், தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்த சாதனை படைத்து, வெற்றிக்கோப்பை, பதக்கம், பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களுடன் திரும்பின.

கரோனா தொற்று பரவல் தருணத்திலும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காமல் சமூக இடைவெளியோடு பயிற்சி பெற்று மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் சாதனை படைத்த இந்த மாணவா்கள் மற்றும் ஊக்கப்படுத்தி பயிற்சியளித்த தமிழ்ச்செல்வன், போட்டி நுணுக்கங்களை கற்றுத்தந்த உடற்கல்வி ஆசிரியா் பரமசிவம் ஆகியோருக்கு, பெற்றோா்கள் மட்டுமின்றி, பள்ளி ஆசிரியா்கள், கிராம மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.