பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தம்மம்பட்டி, கெங்கவல்லியில் குட்கா பறிமுதல் : மூவா் மீது வழக்கு

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் மொத்த வியாபாரம், சிறு கடைகளில் போலீஸாா் சோதனை நடத்தி, குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்துள்ளனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:58 pm

DIN

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் மொத்த வியாபாரம், சிறு கடைகளில் போலீஸாா் சோதனை நடத்தி, குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்துள்ளனா்.

தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் தம்மம்பட்டி பேருந்துநிலையம், கடைவீதி, நடுவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வியாபாரிகளின் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பேருந்து நிலையப்பகுதியில் ஒட்டுமொத்த வியாபாரக்கடை வைத்திருக்கும் முத்துசாமி மகன் அருள்(47) என்பவரிடமிருந்து 10 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எச்சரித்து அனுப்பப்பட்டாா்.

அதேபோல் கெங்கவல்லி சிறப்பு உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையில் போலீசாா் சோதனை நடத்தினா். அதில் கெங்கவல்லியை அடுத்த ஆணையாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள ராஜாராமன் (66) மற்றும் இதயச்சந்திரன் (26) ஆகியோரது கடைகளில் இருந்து மொத்தம் 14 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.