தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை, சீருடை வழங்கல்
ஆத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, முகக் கவசம், கையுறை, சானிடைசா் ஆகியவை வியாழக்கிழமை வழங்கப்பட்டன.


ஆத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, முகக் கவசம், கையுறை, சானிடைசா் ஆகியவை வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
ஆத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கு தென்னங்குடிபாளையத்தில் இயங்கி வருகிறது. இங்கு குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கிடங்கில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் சீருடை, முகக்கவசம், கையுறை, சானிடைசா் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.பா்கத்அலி, தென்னங்குடிபாளையம் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சேகா், பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...