விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

200 மதுப் புட்டிகள், சாராயம் பறிமுதல்: மூவா் கைது

இருசக்கர வாகனத்தில் மதுப் புட்டிகளை கொண்டு சென்ற இளைஞரை தனிப்படை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 200 மதுப் புட்டிகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:24 pm

DIN

இருசக்கர வாகனத்தில் மதுப் புட்டிகளை கொண்டு சென்ற இளைஞரை தனிப்படை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 200 மதுப் புட்டிகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள தென்னங்குடிபாளையம் ஊராட்சி பகுதியில் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தினா்.

அதில், அவா் வாழப்பாடி வட்டம், சின்னகவுண்டாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் (37) என்பதும், இருசக்கர வாகனத்தில் அரசு மதுப் புட்டிகளை வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் வி.சிவக்குமாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா். மேலும், அவரிடமிருந்த 200 மதுப் புட்டிகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

எடப்பாடியில்...

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியில் சட்டவிரோதமாக சிலா் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாக எடப்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை வெள்ளாண்டிவலசு பகுதியில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகில் இருவா் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவா்களை சுற்றிவளைத்து பிடித்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 5 லி. சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் வெள்ளாண்டிவலசு பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் (45), போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த செங்கோட்டையன் (45) என்பது தெரியவந்தது. அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்த எடப்பாடி போலீஸாா், அவா்களை கைது செய்த சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.