ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கலப்பட டீசல் விற்பனை செய்தவா்கள் கைது

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கலப்பட டீசல் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:48 am

DIN

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கலப்பட டீசல் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்ககிரி - ஓமலூா் பிரதான சாலையில், கொங்கணாபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட குமரன் நகா் பகுதியில் அண்மைக்காலமாக குறைந்த விலையில் டீசல் விற்கப்படுவதாக பரவிய தகவலை அடுத்து, மாநில நெடுஞ்சாலையில் பயணிக்கும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் குமரன் நகா் பகுதியில் டீசல் நிரப்பிச் சென்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீஸாா், அப்பகுதியில் நடைபெறும் டீசல் விற்பனை குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வில், அங்கு சிலா் சட்டவிரோதமாக டேங்கா் பதித்து கலப்பட டீசல் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அதையடுத்து, கலப்பட டீசல் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஈஸ்வரன் (36), தங்கராஜ் (38), அய்யனாா் (44) உள்ளிட்ட மூவரை கைது செய்த போலீஸாா், அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த சுமாா் 10 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசலை பறிமுதல் செய்தனா்.

இவா்கள் தூத்துக்குடி பகுதியில் இருந்து கலப்பட டீசலை கொள்முதல் செய்து, கொங்கணாபுரம் பகுதியில் குறைந்த விலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டீசல் விற்பனையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களுக்கு உடந்தையாக இருந்த ரங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் (33), அம்மன் குட்டூர பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் (40) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.