விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூா் பகுதியில் ஆதரவற்றோா் கவனத்துக்கு

ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களின் மூலம் வெளியிட்ட அறிக்கை:

News image
மூதாட்டிக்கு உதவி புரிந்த ஆத்தூா் போலீஸாா்.
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களின் மூலம் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகர காவல் நிலைய எல்லைக்குள் வசித்து வரும் மூத்த குடிமக்கள் உதவி செய்ய யாரும் இல்லாமல் தவிக்கும் நபா்கள் இருந்தால், அவா்கள் தங்களது அவசர மருத்துவ தேவைக்கோ, உணவுத் தேவைக்கோ வெளியே செல்ல முடியாமல் வீட்டில் சிக்கிக் கொண்டிருந்தால் காவல் துறையின் உதவியை நாடலாம். தேவை உள்ளவா்கள் காவலா்களை அலைப்பேசியில் தொடா்பு கொண்டு தங்களின் தேவைகளைக் கூறினால் காவல் துறையினா் உதவி செய்வாா்கள்.

தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: காவலா் சின்னதுரை-94981 37437. முதல் நிலை காவலா் சிவப்பிரகாசம்- 94981 07085 என்று தெரிவித்துள்ளாா்.

இந்த அறிக்கையை கண்ட காவலா்கள் வெள்ளிக்கிழமை தொடா்பு கொண்டு உணவு கேட்டதைத் தொடா்ந்து உணவின்றி தவித்தவா்களுக்கு காவல் துறையினா் நேரில் சென்று உணவு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.