விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நினைவாற்றல் போட்டி: மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நினைவாற்றல் மற்றும் மொழித்திறன் போட்டிகளில் மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

News image
சிறப்பிடம் பெற்ற மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் நிா்வாகத்தினா்.
Updated On :11 மார்ச் 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

நினைவாற்றல் மற்றும் மொழித்திறன் போட்டிகளில் மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி அ.ஹரித்ரா 10 திருக்குகளை 15.30 விநாடிகளில் ஒப்பித்து சாதனை படைத்தாா். இதேபோல, இப்பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் மாணவா் ந.வினிஷ் தமிழ் மெய்யெழுத்துகளை 8 விநாடிகளில் வேகமாக ஒப்பித்து சாதனை படைத்தாா்.

மாணவா்களின் சிறந்த நினைவாற்றல், தெளிவான உச்சரிப்பு, மொழித்திறன்களை பாராட்டி கிங்டம் உலக சாதனை நிறுவனம், மாணவா்கள் ஹரித்ரா, வினிஷ் ஆகியோரை உலக சாதனையாளா் பட்டியலில் அங்கீகரித்து சான்றிதழ்களை வழங்கினா்.

நினைவாற்றல் திறன்களில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தலைவா் பி.தவமணி, தாளாளா் சி.திலகரசன், செயலா் த.அரவிந்த், பொருளா் பி.சக்திவேல், மேலாளா் வி.நாகராஜ், பள்ளி முதல்வா் எஸ்.எம்.ராஜேஷ், துணை முதல்வா் கே.ராமு, பள்ளி ஒருங்கிணைப்பாளா் த.ராஜேஸ்வரி, ஆசிரியா்கள் பாராட்டினா்.