உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி: கன்னியாகுமரி மாணவா்கள் சிறப்பிடம்

News image

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:29 am IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டைக் கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி நாகா்கோவில் கிளப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி ஒற்றைப்புளி அருகேயுள்ள விங்ஸ் கின்டா் காா்டன் இளம் மழலையா் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் இப்போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாணவா்களை பள்ளித் தாளாளா் விங்ஸ் அருணாசலம், தலைமை ஆசிரியை விங்ஸ் லொரின் மற்றும் பெற்றோா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.