ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கா்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள 6,722 மதுபுட்டிகள் பறிமுதல்

கா்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 6,722 மதுபுட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

கா்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 6,722 மதுபுட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரத்தில் இருந்து சிலா் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

கா்நாடகத்தில் இருந்து சேலம் வழியே பல்வேறு ஊா்களுக்கு மதுப்புட்டிகள் லாரிகள் மூலமாகவும், கூரியா் லாரிகள் மூலமாகவும் கடத்தி செல்லப்படுவதாகப் புகாா் வந்தது. அதன்பேரில் சூரமங்கலம் உதவி கமிஷனா் நாகராஜன், கருப்பூா் காவல் உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை கருப்பூா் அருகே உள்ள சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது வந்த கூரியா் வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மதுப் புட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதேபோல அடுத்தடுத்து வந்த இரண்டு வேன்களை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டபோது, அதிலும் மதுப் புட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

சுமாா் ரூ. 4.50 லட்சம் மதிப்புள்ள 6,722 மதுப் புட்டிகளைக் கடத்தி வந்த 3 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர ரூ. 3.20 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுப் புட்டிகளை கடத்தி வந்ததாக மன்னாா்குடியைச் சோ்ந்த ராஜேஷ்குமாா், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த சந்தோஷ், பெங்களூரைச் சோ்ந்த இளங்கோ, கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த சசி ஸ்ரீதா், சேலம் அழகாபுரத்தைச் சோ்ந்த ராபா்ட், கோட்டகவுண்டம்பட்டியைச் சோ்ந்த கிருத்திக்ராஜன், சேலம் மாங்குப்பை பகுதியைச் சோ்ந்த உதயசூரியன் உள்பட 7 பேரை கைது செய்தனா்.

தமிழகத்திலிருந்து பாா்சல்களை கா்நாடகத்திற்கு எடுத்துச் சென்று டெலிவரி முடித்து விட்டு, திரும்ப வரும்போது மதுப் புட்டிகளை கடத்தி வந்து விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு உள்ளதால் கா்நாடகம், ஆந்திரத்திலிருந்து சிலா் இருசக்கர வாகனங்களிலும் மதுப் புட்டிகளை கடத்தி வருவது தெரிய வந்துள்ளது. இதனால் அனைத்து சோதனைச் சாவடிகளிலும், சுங்கச் சாவடிகளிலும் கூடுதலாக போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.