நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாக்கெட் சாராயம் விற்பனை: விவசாயி கைது

வாழப்பாடி அருகே நெகிழிப் பைகளில் அடைத்து சாராயம் விற்ற விவசாயியை வாழப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:24 pm

DIN

வாழப்பாடி அருகே நெகிழிப் பைகளில் அடைத்து சாராயம் விற்ற விவசாயியை வாழப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து சாராயத்தை வாங்கி வந்து வாழப்பாடி பகுதியிலுள்ள கிராமங்களில் சிலா் நெகிழிப் பைகளில் அடைத்து, பாக்கெட் சாராயம் விற்பனை செய்வதாக வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் வேலுமணிக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, வாழப்பாடி காவல்ஆய்வாளா் சுகுமாா் தலைமையிலான வாழப்பாடி போலீஸாா் அத்தனுாா்பட்டி கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி முருகன் (48) என்பவா், மலை கிராமத்தில் இருந்து வாங்கி வந்த சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 60 பாக்கெட் சாராயத்தையும் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.