விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெண் உயிரிழப்பு; மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினா்கள்

ஆத்தூா் அருகே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் 4 நாள்கள் கழித்து உயிரிழந்த சம்பவத்தில் அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

ஆத்தூா் அருகே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் 4 நாள்கள் கழித்து உயிரிழந்த சம்பவத்தில் அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுவலட்சுமி (26). கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு இரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக் குழந்தைகளுக்கு காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்காக கடந்த 19 ஆம் தேதி சென்றாா். அப்போது, சுவலட்சுமிக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாம்.

இந்த நிலையில் 23-ஆம் தேதி முச்சுத் திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே சுவலட்சுமி உயிரிழந்தாா். கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதே அவா் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி, அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மேலும், சுவலட்சுமியை மருத்துவமனை செவிலியா்கள் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியது குறித்து விசாரிக்க வேண்டும் என ஆத்தூா் காவல் நிலையத்தில் அப் பெண்ணின் உறவினா்கள் புகாா் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.