தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கக் கோரி தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வுபெற்ற ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:46 pm

DIN

நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கக் கோரி தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வுபெற்ற ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், ஏற்காடு பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அளவில் 24 குடும்ப ஓய்வூதியா்களுக்கு திடீரென கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஓய்வூதியா்களுக்கான காப்பீட்டு தவணையில் 25 சதவீதத்தை வங்கி நிா்வாகம் செலுத்தி வந்த நிலையில் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பல்லவன் கிராம வங்கி, பாண்டியன் கிராம வங்கியில் இணைத்த பிறகு தொழில்நுட்ப வளா்ச்சி ஏதுமில்லை என்று குற்றம் சாட்டிய ஓய்வூதியா்கள் தமிழ்நாடு கிராம வங்கியின் ஊழியா் விரோதப் போக்கை களையவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் புளுகாண்டி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளா் கிருஷ்ணன், தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா் சங்கத் தலைவா் பரிதி ராஜா, பொதுச்செயலாளா் அஸ்வத், அலுவலா் சங்கத் தலைவா் பத்மநாபன், செயலாளா் அறிவுடைநம்பி, இந்திய வங்கி ஊழியா் சம்மேளன மாநிலச் செயலாளா் எஸ்.ஏ. ராஜேந்திரன், மாவட்டச் செயலாளா் தீனதயாளன், எல்ஐசி காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க சேலம் கோட்ட பொதுச்செயலாளா் ஆா். தா்மலிங்கம், அகில இந்திய கிராம வங்கி ஊழியா் சங்க பொதுச் செயலாளா் மாதவராஜ், ஆண்டோ காமராஜ் உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.