
எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக இவர்தான்!
எதிர்நீச்சல் -2 தொடரில் நடிகை கனிகாவுக்கு பதிலாக ஈஸ்வரி பாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகை குறித்து...

கனிகா / தேவையானி - படம் - இன்ஸ்டாகிராம்
எதிர்நீச்சல் -2 தொடரில் நடிகை கனிகாவுக்கு பதிலாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடரான எதிர்நீச்சல் -2, மற்ற தொடர்களைக் காட்டிலும் முன்னணி இடத்தைப் பிடித்து வருகிறது. வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானாலும் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ளது.
இத்தொடரில் நடிகை பார்வதி, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இத்தொடரில் ஈஸ்வரி என்ற முதன்மை பாத்திரத்தில் நடித்துவந்த நடிகை கனிகா, எதிர்நீச்சல் -2 தொடரில் இருந்து விலகியுள்ளார். முதல் பாகத்தில் இருந்தே நடித்துவந்த இவர் தற்போது விலகியதால், ஈஸ்வரி தொடர்பான காட்சிகள் சமீபகாலமாக இடம்பெறவில்லை.
இந்நிலையில், எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக நடிகை ஸ்ரீஜா நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

கனிகா , ஸ்ரீஜா - இன்ஸ்டாகிராம்
பொம்மலாட்டம் தொடரில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை ஸ்ரீஜா. இதுமட்டுமின்றி கல்யாணப் பரிசு, வீடு உள்ளிட்டத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கும் ஆதி குணசேகரனின் மனைவியாக, ஈஸ்வரி பாத்திரத்தில் இனி ஸ்ரீஜா நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது.
பலரும் இந்த பாத்திரத்தில் நடிகை தேவையானியை நடிக்க பரிந்துரை செய்து வருகின்றனர். இயக்குநர் திருச்செல்வத்தின் கோலங்கள் தொடரில் நடிகை தேவையானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Devaiyani or Sreeja new actress will replace Kanika in the series Ethirneechal -2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






