கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன்: எதிர்நீச்சல் பார்வதி

பெண்களின் இயல்புகள் பணியிடங்களில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு வருவதாக சின்ன திரை நடிகை பார்வதி கருத்து...

News image
நடிகை பார்வதி- படம் - இன்ஸ்டாகிராம்
Updated On :16 மார்ச் 2026, 10:42 am

இணையதளச் செய்திப் பிரிவு

சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன் என எதிர்நீச்சல் தொடரின் நாயகி பார்வதி தெரிவித்துள்ளார்.

பல்வேறு இடங்களில் பெண்களின் இயல்புகள் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவதாகவும், ஆனால் அவற்றை சகித்திக்கொள்ள வேண்டிய இடத்திலேயே பெரும்பாலான பெண்கள் இருக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றத் தொடர்களில் ஒன்றாக எதிர்நீச்சல் -2 தொடர் உள்ளது. பெண்களின் முன்னேற்றத்தையும் மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இத்தொடர், இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.

ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் மருமகள்களாகச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பிரச்னைகளுமே இத்தொடரின் மையக்கருவாக உள்ளது.

இத்தொடரின் முதன்மை பாத்திரத்தில் நடிகை பார்வதி நடித்துவருகிறார். இவர் மட்டுமின்றி ஹரிபிரியா இசை, பிரியதர்ஷ்னி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் -2 தொடரின் நாயகிகள்

எதிர்நீச்சல் -2 தொடரின் நாயகிகள்

இந்நிலையில் பணியிடத்தின் சூழல் குறித்து நடிகை பார்வதி பேசியது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பணிபுரியும் இடத்தில், தான் மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை, தனக்கும் கிடைக்க வேண்டும் என்றும், சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன் எனவும் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பார்வதி

நடிகை பார்வதி

நடிப்புத் துறையில் நுழைந்ததுமே தான் எடுத்த மிக முக்கியமான முடிவு இது என்றும், அத்தகைய மரியாதை கிடைக்கும்போது தனது முழு பங்களிப்பையும் அளிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் நேரத்தை செலவழித்து தொடர்களைப் பார்ப்பதாகவும், அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையிலான பணிகளையே தொடர்ந்து செய்வதாகவும் கூறியுள்ளார்.

பல்வேறு இடங்களில் பெண்கள் தங்களின் நடவடிக்கைகளுக்காக விமர்சிக்கப்படுவதாகவும், ஆனால், இதனைச் சகித்துக்கொண்டு பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான பெண்கள் இருப்பதாகவும் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.