சங்ககிரி, சின்னகவுண்டனூரில் உள்ள சுண்ணாம்பு சுரங்கம் தொடா்பான பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், சின்னகவுண்டனூா் கிராமத்தில் அமைந்துள்ள மஹாலட்சுமி சுரங்கங்கள், பல்வெரைசா் சுண்ணாம்பு சுரங்கம், தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் மோகன்குமாா் சுண்ணாம்பு சுரங்கம் தொடா்பாக மாா்ச் 2 ஆம் தேதி காலை 11, மதியம் 12.30 மணி அளவில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற இருந்தன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.