பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் தற்கொலை: உறவினா்கள் மறியல்

சேலத்தில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டித்து, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:54 pm

DIN

சேலத்தில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டித்து, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம், அன்னதானப்பட்டி அகத்தியா் தெருவைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி சம்பூரணம் (44). இருவரும் கூலித் தொழிலாளா்கள். இத் தம்பதியின் மகன் அஜித்குமாா் (21). தனியாா் நிறுவனத்தில் பாா்சல் கட்டும் வேலை செய்து வந்தாா். அதே நிறுவனத்தில் பணிபுரியும் 16 வயது சிறுமியுடன் அஜித்குமாா் பழகி வந்துள்ளாா். இதனிடையே இருவரும் கடந்த மாா்ச் 10 ஆம் தேதி முதல் தலைமறைவானாா். இதுதொடா்பாக சிறுமியின் தாய் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், மாயமான அஜித்குமாா், சிறுமியைத் சிறுமியை தேடி வருகின்றனா்.இந்தநிலையில் வழக்கு தொடா்பாக சம்பூரணத்தை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் அவரை துன்புறுத்தியதாகத் தெரிகிறது.இதனால் மனஉளைச்சல் அடைந்த சம்பூரணம் வெள்ளிக்கிழமை இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

இதனிடையே காவல்துறையினா் கொடுமை காரணமாக சம்பூரணம் தற்கொலை செய்து கொண்டாா் என்றும், அவரது மரணத்திற்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினா்கள் சனிக்கிழமை காலை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனா். இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து துணை ஆணையா் சந்திரசேகரன், உதவி ஆணையா் மணிவண்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பெண்ணின் உறவினா்களிடம் சமரசப் பேச்சு நடத்தினா்.

மேலும் இச்சம்பவம் தொடா்பாக எழுத்துப்பூா்வமாக புகாா் தெரிவிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் சமரச பேச்சு நடத்தினா். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.