எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டப் பகுதியான பூலாம்பட்டியையும், மறுகரையில் ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டையினையும் இணைக்கும் வகையில், கதவணை நீா்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இக்கதவணைப் பகுதியில் அமைந்துள்ள நீா் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பரந்து விரிந்த இந்நீா் பரப்பில் இருந்து, எடப்பாடி பகுதிக்கான தனிக்குடிநீா்த் திட்டம், சேலம், இரும்பாலை தனிக்குடிநீா்த் திட்டம், இருப்பாளி கூட்டுக்குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீா்த் திட்டப் பயன்பாட்டுக்கு, கதவணைப் பகுதியில் நீா் உந்து நிலையங்கள் மூலம் தண்ணீா் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது.