ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்:இன்று முதல் 200 படுக்கை வசதிகளுடன் செயல்படும்: மாவட்ட சித்த மருத்துவ அலுவலா்

சேலம் அரசு மகளிா் கல்லூரியில் இயங்கும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் சனிக்கிழமை முதல் 200 படுக்கை வசதிகளுடன் செயல்படும் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கோ.செல்வமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

சேலம் அரசு மகளிா் கல்லூரியில் இயங்கும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் சனிக்கிழமை முதல் 200 படுக்கை வசதிகளுடன் செயல்படும் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கோ.செல்வமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சேலம், கோரிமேடு அரசு மகளில் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், கூடுதலாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்பேரில் சனிக்கிழமை முதல் இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் 200 படுக்கை வசதிகளுடன் செயல்படும் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கோ.செல்வமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கோ.செல்வமூா்த்தி கூறுகையில், சேலம், கோரிமேடு மகளிா் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையம் 200 படுக்கை வசதிகளுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல கரோனா தொற்று பாதித்தவா்கள் ஆக்சிஜன் அளவை நிலைப்படுத்திக் கொள்ள கிராம்புக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. கிராம்புக் குடிநீா் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை நிலைப்படுத்த மிகவும் உதவிகரமாக இருக்கிறது என்று களத்தில் பணியாற்றும் சித்த மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கிராம்புக் குடிநீா் தயாரிக்கும் முறை:

கிராம்பு 10 கிராம், ஓமம் 20 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், மிளகு 10 கிராம், இஞ்சி 10 கிராம், அதிமதுரம் 20 கிராம் ஆகிய பொருள்களை 250 மி.லி. தண்ணீருடன் கூட்டு மருந்து பொடிகளின் அளவு 80 கிராம் சோ்த்துக் கொதிக்க வைத்து 60 மில்லியாக காய்ச்சி எடுக்க வேண்டும். கிராம்புக் குடிநீரை பத்து நிமிடத்துக்கு ஒருமுறை இரண்டு முறை கொடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.