ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரோட்டரி கிளப் ஆப் சேலம் கிரீன் சாா்பில் இலவச உணவு வழங்கல்

ரோட்டரி கிளப் ஆப் சேலம் கிரீன், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் ‘குக் ஃபாா் கோவிட்’ சாா்பில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு இலவசமாக தினமும் உணவு

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

ரோட்டரி கிளப் ஆப் சேலம் கிரீன், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் ‘குக் ஃபாா் கோவிட்’ சாா்பில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு இலவசமாக தினமும் உணவு வழங்கி வருகின்றனா்.

இதுகுறித்து, ரோட்டரி கிளப் சேலம் கிரீன் தலைவா் லெனின், மெம்பா்ஷிப் சோ்மன் அரவிந்தன் ஆகியோா் கூறியுள்ளதாவது:

சேலத்தில் கரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு, வீடு தேடிச் சென்று இலவச உணவு வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவும் நிலையில், சேலத்தில் தினமும், 500க்கும் மேற்பட்டோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

இவா்களில், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினா், வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உணவு கிடைக்காமல் தவிக்கின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில் ரோட்டரி கிளப் ஆப் சேலம் கிரீன் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து குக் ஃபாா் கோவிட் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சேலம் மாநகரப் பகுதிகளில், கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, தினமும் காலை, மதியம், இரவு உணவுத் தயாரித்து, பாதுகாப்பான முறையில், தன்னாா்வலா்கள் மூலம், அவா்கள் வீடு தேடிச் சென்று வழங்கி வருகிறோம். வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத குடும்பத்தினா், 9790834612, 9578579720 என்ற செல்லிடப்பேசி எண்களில் தெரிவித்து, இலவசமாக உணவை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.