/

கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிக்கையாளா் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதி உதவி

கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு, அதிமுக சாா்பில் ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழக்கப்படும் என சட்டமன்ற எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:19 pm

DIN

கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு, அதிமுக சாா்பில் ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழக்கப்படும் என சட்டமன்ற எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியைச் சோ்ந்த அ.நல்லதம்பி. தினசரி இதழில் கடந்த 20 ஆண்டுகளாக செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தாா். அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா் கடந்த 21-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்நிலையில் செய்தியாளா் நல்லதம்பியின் மனைவி அமராவதி, வெள்ளிக்கிழமையன்று எடப்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியிடம், தனது குடும்பத்திற்கு உதவக் கோரி மனு அளித்தாா்.

இதனையடுத்து, செய்தியாளா்கள் சந்திப்பின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி , செய்தியாளா் நல்லதம்பியின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.