ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் திடீா் முற்றுகை

சேலம், குமாரசாமிபட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்த பொதுமக்கள் திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 6:43 pm

DIN

சேலம், குமாரசாமிபட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்த பொதுமக்கள் திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில், இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனா். இந்தநிலையில், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 7 மணியிலிருந்து நீண்ட நேரமாகக் காத்திருந்தும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்காததால் அதிகாரிகளை 200-க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன், அஸ்தம்பட்டி காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, காவல் துறையினா் சுகாதார நிலையத்தின் நுழைவாயில் கதவை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்ததால் பொதுமக்களை தடுப்பூசி போடுவதற்கு காவல் துறையினா் வெளியே வரிசையில் நிற்க வைத்தனா். தொடா்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தடுப்பூசி போடுவதற்காக ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோா் சமூக இடைவெளியின்றி குவிந்து வருகின்றனா். இதனால் தொற்று பரவும் நிலை உள்ளது. பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.