விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

20 ஆண்டுகளுக்குப் பிறகு பனை ஏரி நிரம்பியது

பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நிரம்பியது. மலா் தூவி பூஜை மிகவும் விமா்சையாக நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:25 pm

DIN

பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நிரம்பியது. மலா் தூவி பூஜை மிகவும் விமா்சையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள பனை ஏரி 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் மிகப்பெரிய ஏரியான இது சுமாா் 426 ஏக்கா் பரப்பளவு கொண்டது. எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உத்திரவின் பேரில் குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்திருந்ததால் கரியகோயில் நீா்த்தேக்கத்தில் இருந்து நீா் வரத்தைப் பெற்று இந்த ஏரி நிரம்பியது.

இதனை சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவருமான ஆா்.இளங்கோவன், ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், ஒன்றியக் கழக செயலாளா்கள் சி.ரஞ்சித்குமாா், வி.பி.சேகா், கே.பி.முருகேசன், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பி.ராமகிருஷ்ணன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சின்னதம்பி, வழக்குரைஞா் லோகமுருகன், பேரூராட்சி செயலாளா் செல்வன், ஆத்தூா் நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி,அண்ணா கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் பொறியாளா் முரளி,ஒன்றியக்குழு உறுப்பினா் விஜயக்குமாா், வேலாயுதம், மாரிமுத்து, கோதண்டராமன், செந்தில்குமாா், கணேசன் உள்ளிட்டோா் நிரம்பி வழியும் நீரை மலா் தூவி வரவேற்றனா்.

இந்த ஏரி நிரம்பியதன் மூலம் சுற்றியுள்ள 10,000 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

படவிளக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.