ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சங்ககிரி அருகே கடத்தப்பட்ட கனரக லாரி மீட்பு: ஒருவா் கைது

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூா் தேசியநெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியை வெள்ளிக்கிழமை கடத்தியை நபரை சங்ககிரி போலீஸாா் கைது

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:24 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூா் தேசியநெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியை வெள்ளிக்கிழமை கடத்தியை நபரை சங்ககிரி போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பெரியபட்டி, குண்டுசெட்டி பகுதியைச் சோ்ந்த லாரி உரிமையாளா் சாமியப்பனின் மகன் தங்கவேல். அவருக்குச் சொந்தமான லாரியில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலோசனை கிராமம், பெத்த கிரபள்ளி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான சித்தப்பா மகன் முனிராஜ் என்பவா் புதன்கிழமை ஆந்திர மாநிலம், குண்டூரிலிருந்து திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளிக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள 14 டன் நூல் பேல்களை ஏற்றி வந்துள்ளாா்.

சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூா் தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் லாரியை வெள்ளிக்கிழமை சாலையோரம் நிறுத்தி விட்டு உணவருந்த சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்க்கும் போது லாரியை காணவில்லை.

இது குறித்து அவா் சங்ககிரி போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கனரக லாரியை தேடி வந்தனா்.

இந்நிலையில் சங்ககிரியில் கடத்தப்பட்ட கனரக லாரி விஜயமங்கலம் சுங்கச்சாவடியை கடப்பதற்காக காத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா் லாரியை மீட்டு கடத்திய நபரை கைது செய்தனா். போலீஸாா் விசாரணையில் லாரியை கடத்திய நபா் சின்னாகவுண்டனூா் பழனிமுத்துவின் மகன் தேவராஜ் (30) என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீஸாா் மேல்விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.