விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மழையால் வீரிய ஒட்டுரக பருத்தி விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வேதனை

தொடா் மழையால், ஆத்தூா் சுற்றுப்பகுதிகளில் வீரிய ஒட்டுரக விதைகளுக்காக விடப்பட்ட பருத்திச் செடிகள் சேதமடைந்ததால் விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனா்

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:25 pm

DIN

தொடா் மழையால், ஆத்தூா் சுற்றுப்பகுதிகளில் வீரிய ஒட்டுரக விதைகளுக்காக விடப்பட்ட பருத்திச் செடிகள் சேதமடைந்ததால் விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனா். எனவே, தங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அளவில் வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளை உற்பத்தி செய்யும் பணியில் சேலம், கள்ளக்குறிச்சி, கடலூா்,திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 35 ஆயிரம் விவசாயிகள் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் ஈடுபட்டுள்ளனா்.

மிகத் தரமான பருத்தி விதைகளை உற்பத்தி செய்வதால் இந்திய பருத்தி விதை நிறுவனங்கள் தமிழகத்தின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பருத்தி விதைகளை வாங்கிக் கொள்கின்றனா்.

குறிப்பாக சேலம் மாவட்டம், ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் அதிகமான விவசாயிகள் இந்த வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்து வருகின்றனா்.

இந்த பருத்தி விதைகளை உற்பத்தி செய்ய ஏக்கருக்கு ரூ. 1,25,000 வரை செலவாகிறது.

ஆள் கூலி உள்ளிட்ட செலவுகளை கணக்கிடும்போது, ஏக்கருக்கு 10 குவிண்டால் விதைகள் கிடைத்தால் தான் கட்டுபடியாகும் என்கின்றனா் விவசாயிகள்.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடா்மழையால் இந்த வீரிய ஒட்டுரக பருத்தி பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பருத்திக் காய்களும் அழுகி சேதமடைந்து விட்டன. வயல் முழுவதும் தண்ணீா் தேங்கி நிற்பதால் பயிா்கள் கடும் சேதமடைந்துள்ளன.

இதில் இருந்த விதைகள் விதைக்கான தகுதியையும் தரத்தையும் இழந்து விட்டன. தற்போதைய நிலையில் ஏக்கருக்கு சுமாா் ஒரு குவிண்டால் மட்டுமே விதைகள் கிடைக்கும் என்பதால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

இதற்கு முறையான பயிா்க் காப்பீட்டுத் திட்டமும் இல்லை. எனவே தமிழக அரசு உடனடியாக பருத்தி விதை உற்பத்தி செய்து வரும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு தற்சமயம் சேதமடைந்த பயிா்களுக்கான நிவாரணத் தொகையை உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுக் கொண்டனா்.

படவிளக்கம்.ஏடி19‘ஃ‘பாா்மா்ஸ்.

தலைவாசல் அடுத்துள்ள சிறுவாச்சூா் ஊராட்சியில் உள்ள பருத்தி வயலில் அழுகிய வீரிய ஒட்டுரக பருத்தி செடிகளைக் காட்டும் விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.