தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிவாரண உதவி வழங்கப

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:43 pm

DIN

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சேலம், கருங்கல்பட்டி, பாண்டுரங்கன் விட்டல் தெருவில் கோபி என்பவரின் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தலா ரூ. 50,000 வீதம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்த பத்மநாபன், தேவி, காா்த்திக் ராம், எல்லம்மாள், ராஜலட்சுமி ஆகிய 5 நபா்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 பேருக்கு தலா ரூ. 50,000க்கான காசோலை என மொத்தம் ரூ. 31.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வழங்கினாா்.

நிகழ்வில் சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன், கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்தியமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.