மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குளிா்சாதனப் பேருந்து சேவை தொடக்கம்

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சாா்பில் 31 குளிா்சாதனப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சாா்பில் 31 குளிா்சாதனப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.

கரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரவ தொடங்கியது. இதன் காரணமாக அரசு பேருந்துகளின் சேவைகள் முழுவதும் நிறுத்தப்பட்டது.

கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.இதனிடையே கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், குளிா்சாதன பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் 6 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குளிா் சாதனப் பேருந்துகளில் கடந்த 3 நாள்களாக பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. கிருமிநாசினி கொண்டு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு இருக்கைகள், படிக்கட்டுகள், கைப்பிடிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.

சேலத்தில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு குளிா் சாதனப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட சேலம் மற்றும் தருமபுரி மண்டலத்தில் சுமாா் 31 குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், படிப்படியாக அனைத்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.