பாஜக கொடி தீ வைத்து எரிப்பு

வேப்பநத்தம் ஊராட்சியில் புதன்கிழமை பாஜக கொடியை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

வேப்பநத்தம் ஊராட்சியில் புதன்கிழமை பாஜக கொடியை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்துள்ள வேப்பநத்தம் ஊராட்சியில் கடந்த மாதம் பாரதப் பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சாா்பில் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்கள்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் பாஜக கொடியை இறக்கி தீ வைத்து எரித்துள்ளனா்.இது குறித்து தகவலறிந்த மாவட்ட தலைவா் வழக்குரைஞா் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் விரைந்து சென்று நிகழ்விடத்தை பாா்வையிட்டு தலைவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.புகாரை பெற்றுக் கொண்ட தலைவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொடியை தீ வைத்து எரித்த மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தலைவாசல் போலீஸாா் சிசிடிவி காட்சிகளை வைத்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com