மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும் 5 மாவட்டங்களில் கிராமங்கள் தோறும் விழிப்புணா்வு

குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும் 5 மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:05 pm

DIN

குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும் 5 மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம், அஸ்தம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு கூா்நோக்கு இல்லம், அரசு மகளிா் காப்பகம், அய்யன்திருமாளிகையில் உள்ள அன்னை சத்யா அம்மையாா் நினைவு அரசு குழந்தைகள் இல்லங்களையும் அமைச்சா் கீதா ஜீவன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கிருஷ்ணகிரியில் குழந்தைத் திருமணம் தடுப்புத் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய கிராம அளவிலான குழு மூலம் குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கரூா், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் குழந்தைத் திருமணம் அதிக அளவில் நடைபெறுகிறது.

கூடுதல் கவனம் செலுத்தி கிராமங்கள் தோறும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். குழந்தைத் திருமணங்களைத் தடுக்க கிராம அளவிலும் மாவட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன.

திருமண நிதியுதவி பெறும் திட்டத்தில் கடந்த ஆட்சியில் மதுரையில் 46 திருமணங்கள் நடைபெறாமலேயே திருமணங்கள் நடந்ததுபோல பத்திரிகைகள் தயாரித்து திருமண நிதியுதவிக்கு சிலா் விண்ணப்பித்திருந்தனா்.

அந்தத் தவறுகள் கண்டறியப்பட்டு திருமண நிதியுதவித் தொகை வழங்கப்படவில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 21 தத்தெடுப்பு மையங்கள் உள்ளன. மத்திய அரசின் விதிமுறைகளின்படி தத்தெடுப்பு மையங்கள் செயல்படுகிறது என்றாா். ஆய்வின்போது ஆட்சியா் செ.காா்மேகம், சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநா் ச.வளா்மதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.